search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு"

    • காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யப் படுவதாக புகார் வந்தது.
    • பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பல்லடம் :

    கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், போன்றவற்றை மக்கள் உட்கொள்வார்கள். இந்த நிலையில் பல்லடம் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் காலாவதியான குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படி பல்லடம் பகுதி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜ் பல்லடம் நகரில் பஸ் நிலையம், கடை வீதி, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து அலுவலர் கேசவராஜ் கூறுகையில்:- பொதுமக்கள் கடைகளில் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் வாங்கும் போது பாட்டில்களில் உற்பத்தி மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதி ஆகும் தேதியை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். இது குறித்து ஏதேனும் புகார் அளிக்க வேண்டுமானால் 9444042322 என்ற செல்போன் எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தரலாம். புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×